search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.டெக் பட்டதாரி பெண் மாயம்"

    நெட்டப்பாக்கத்தில் கடைக்கு சென்ற பி.டெக் பட்டதாரி பெண் மாயமானார்.
    சேதராப்பட்டு:

    நெட்டப்பாக்கம் அம்மா பேட்டை வீதியை சேர்ந்தவர் பழனி. கூலித்தொழிலாளி. இவரது மகள் பரமேஸ்வரி (வயது 24). பி.டெக் பட்டதாரி.

    நேற்று மாலை இவர் கடைக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிச்சென்றார். ஆனால், அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. 
    உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் பரமேஸ்வரி இல்லை. 

    இதையடுத்து பழனி தனது மகள் மாயமானது குறித்து நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பரமேஸ்வரியை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
    ×